பரத் என்பவன் தன்னுடைய கிராமத்தில் சொந்த நிலத்தில் வீடு கட்டுவதற்கான பூமி பூஜை செய்தான். மறுநாள் வீடு கட்டுவதற்கான வேலையை ஆரம்பித்தார்கள். ஆரம்பிக்கும்போது நிலத்திலிருந்து இரண்டு அடி தள்ளி மெயின் ரோட்டில் ஆரம்பித்தார்கள். அது கிராமம் என்பதால் வீடுகள் அதிகமாக இல்லை பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று மெயின் ரோட்டை ஆக்கிரமித்து வீடு கட்டினார். ஒரு வருடத்திற்கு பின்னர் வீடு கட்டி முடித்து விட்டு குடியும் வந்துவிட்டான். பத்து வருடங்கள் கழித்து வீடுகள் நிறைய. ஆயின.high ways department அந்த கிராமத்திற்கு சாலை போட்டார்கள். பரத்தின் வீடு முன்னால் இரண்டடி இடிக்கப்பட்டது. இதற்குப் பேசாமல் அவன் அரசாங்கத்தின் விதிகளை மதித்து வீடுகட்டி இருக்கலாம்
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது





கருத்துகள்
கருத்துரையிடுக