அருள் என்பவன் கரூரில் வசித்து வந்தான். அவனுக்கு மனைவி மற்றும் 1 குழந்தை உள்ளனர்.அவன் ஒரு பேங்க் எம்பிளாய். அவன் நாய் குட்டி ஒன்றை வளர்த்து வந்தான். அந்த நாய் திடீரென்று இறந்து விட்டது. புதிதாக நாய் ஒன்றை வாங்கி வந்தான் .அந்த நாய் இரவில் அவர்களை தூங்கவிடாமல் குரைத்து கொண்டு இருந்தது.அருள் தூக்கத்திலிருந்து எழுந்து வந்து நாயே குரைக்காதே என்று சொல்லி அடித்துவிட்டான். சில நாட்கள் கழித்து அருள் வீட்டுக்கு திருடன் வந்து விட்டான். நாய் குறைக்கவே இல்லை திருடன் அருள் வீட்டில் இருக்கும் நகையை திருடிவிட்டு சென்றுவிட்டான். அருள் நாயை முறைத்து பார்த்து கொண்டே போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்தான்.
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது


கருத்துகள்
கருத்துரையிடுக