குமரேசன் என்பவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா ஊட்டி சென்றான். குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர். குமரேசன் அவனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள்.அவன் மேட்டுப்பாளையத்தில் இருந்து காரில் சென்றான். அவன் செல்லும் போது எதிர்பாராவிதமாக ஆற்றுப்பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்து விட்டது. நான்கு பேரும் தண்ணீருக்குள் மாட்டிக் கொண்டனர். குமரேசன் முதலில் தனது மனைவியை மேலே கொண்டு வந்தான், பின்பு தன் முதல் பெண்குழந்தையை மேலேகொண்டு வந்தான்.இரண்டாவது குழந்தையை காப்பாற்ற சென்றவன் வரவே இல்லை அந்தக் குழந்தையும் வரவில்லை அவர்கள் இருவர் உடல்கள் மேலே மிதந்து வந்தது.
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது

கருத்துகள்
கருத்துரையிடுக