ஒருவன் சென்னையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் ஒரு கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தான். அவன் பள்ளிக்கூடம் செல்லாததால் சிறுவயது முதல் மாடு மேய்த்துக் கொண்டிருந்தான்.அவனுக்கு தற்போது வயது 22 அவனுக்கு இப்போது அந்த வேலை பிடிக்கவில்லை. சென்னைக்கு சென்று வேறு ஏதாவது வேலை செய்து கொள்ளலாம் என்று சென்னைக்கு வந்தான். வரும்பொழுது தன் வீட்டிலிருந்து கொஞ்சம் ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு வந்தான். சென்னைக்கு வந்து வேலை தேடினான் அவனுக்கு எங்கும் வேலை கிடைக்க வில்லை கையில் இருந்த காசு செலவாகி விட்டது. ஒரு நாள் இரவில் அவன் சத்தரம் அருகில் தங்கினான். அப்பொழுது அங்கே பக்கத்தில் ஒரு கொலை நடந்து விடுகிறது. மறுநாள் போலீஸ்காரர்கள் இவனையும் சந்தேக கேஸில் பிடித்து உள்ளே வைத்து விடுகிறார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்குள் உட்கார்ந்தபடி நினைக்கிறான் நாம் இதற்குப் பேசாமல் நம் ஊரிலேயே மாடு மேய்த்துக் கொண்டு இருக்கலாம் என்று
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது
கருத்துகள்
கருத்துரையிடுக