கோவிந்தன் என்பவன் காட்டுப்பகுதியை ஒட்டி உள்ள கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தனியாக வாழ்ந்து வந்தார். அவனுடைய வேலை விறகு வெட்டுவது பின்பு அந்த விறகு கொண்டு போய் சந்தையில் விற்று வருவது .அப்படி ஒரு நாள் செல்லும்போது சிறுத்தைப்புலி ஒன்று முள் வலையில் மாட்டி அடிபட்டுக் கிடந்தது. உடனடியாக வனத்துறைக்கு தகவல் சொல்லி அதற்கு உதவினான். இந்த சம்பவங்கள் நடந்து சில மாதங்கள் ஆகின. ஒருநாள் காட்டுப்பகுதிக்கு விறகு வெட்டச் சென்றான் .காட்டுயானைகள் இவனை துரத்தினர். அப்பொழுது இவன் உதவிய சிறுத்தைப்புலி காட்டு யானைகளை விரட்டியது .சிறுத்தைப்புலி கோவிந்தனுக்கு உதவியது
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது

கருத்துகள்
கருத்துரையிடுக