சந்தோஷ் ஈரோட்டில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தான். அதையே பனியன் கம்பெனியில் புஸ்பா என்ற பெண்ணும் வேலைப் பார்த்து வந்தாள். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் ஒரு முகூர்த்த நாளில் யாருக்கும் தெரியாமல் ஓடிச்சென்று திருமணம் செய்துகொண்டனர். பின்பு திருமணம் செய்துவிட்டு திருமணக்கோலத்தில் சந்தோஷ் வீட்டிற்கு சென்றனர். சந்தோஷ் பெற்றோர் இப்ப வீட்டுக்கு வராத என்று சொல்லிவிட்டார்கள். பின்பு சந்தோஷ் அவரது மனைவி வீட்டுக்கு சென்றனர். அவர்களும் சந்தோஷிடம் சண்டைபோட்டுவிட்டு விரட்டி அடித்து விட்டனர் இருவரையும். பின்பு இருவரும் சந்தோஷ் நண்பர் வீட்டுக்கு சென்றனர். பின்பு அங்கேயே 2 நாட்கள் இருந்தனர்.பின்பு சந்தோஷின் நண்பர் சந்தோஷின் பெற்றோரையும் புஷ்பாவை வின் பெற்றோரையும் ஒரு இடத்திற்கு வர சொல்லி சமாதானம் செய்தார். பின்பு நாளை சந்தோஷியையும் புஷ்பாவையும் எங்கள் வீட்டில் கொண்டு வந்து விட்டு விடுங்கள் என்று சந்தோஷின் தகப்பனார் சொல்லிவிட்டார். மறுநாள் சந்தோஷ் புஷ்பாவையும் பைக்கில் கூட்டிக்கொண்டு சந்தோஷம் நண்பர் வந்து கொண்டு இருந்தார் சந்தோஷின் அப்பா வீட்டுக்கு. மணமக்கள் இருவரையும் வீட்டில் விட்டுவிட்டு சந்தோஷின் நண்பர் வந்து கொண்டு இருந்த போது சாலையில் குடி போதையில் வந்த ஒருவன் சந்தோஷின் நண்பர் மீது காரை விட்டுவிட்டார். சந்தோஷ் நண்பா அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். காதல் இணைந்தார்கள் காதலர்கள் குடும்பமும் இணைந்தது இருவரையும் நினைத்தவன் ........? விதி வலியது
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது
கருத்துகள்
கருத்துரையிடுக