ஐந்து நண்பர்கள் முயல் வேட்டையாடுவதற்கு சென்றனர் .அப்பொழுது அவர்களுக்கு முயல் கிடைக்கவில்லை.அடுத்தநாள் முயல் பிடிக்கும் கண்ணியை வாங்கிக் கொண்டு முயல் பிடிக்க சென்றனர். கண்ணி வைத்துவிட்டு வரும்பொழுதும் முயல் கிடைக்க வில்லை .ஐந்து நண்பர்களில் ஒருவன்ஐந்து நண்பர்களில் ஒருவன் சொன்னான் நான் நாளை வரும்பொழுது எனது வீட்டில் இருக்கும் நாயை கொண்டு வருகிறேன்அப்போது மீதியிருக்கும் நானும் நண்பர்களும் சரி என்றனர்.மறுநாள் அவன் நாயைக் கொண்டு வந்தான். மறுநாள் வேட்டைக்கு புறப்பட்டனர். அவன் கொண்டு வந்த நாய் முயலைப் பிடித்து விட்டது.
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது
கருத்துகள்
கருத்துரையிடுக