ஒரு ஊரில் குமார் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அவன் வீட்டில் நாய் குட்டி ஒன்றை வளர்த்து வந்தான். அவன் காலையில் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலையில் வந்து அந்த நாய் உடன் விளையாடுவான். சில மாதங்கள் ஆயின. அவனுடைய நாய் இரவில் ஊளையிட ஆரம்பித்தது. இதனால் அவனுடைய தூக்கம், மற்றும் அக்கம் பக்கத்து வீட்டாரின் தூக்கம் கெட்டது. அவர்கள் அனைவரும் இவர்கள் வீட்டின் மேல் சண்டைக்கு வந்தனர். குமாரின் அப்பா நாய் நமக்கு வேண்டாம் நாயைக் கொண்டு போய் எங்காவது விட்டுவிட்டு வந்துவிடலாம் என்றார் குமாரிடம். அவனும் அழுதான். பின்பு சரி என்றான். ஒருநாள் காரில் குமாரும் அவனது அப்பாவும் அவர்களுடைய நாயைக் கொண்டுபோய் 20 கிலோ மீட்டர் தள்ளி ஒரு ஊரில் விட்டுவிட்டு வந்துவிட்டனர். ஆனால் நாய் அவர்களுக்கு முன்னால் வீட்டுக்கு வந்து விட்டது. இதனால் அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு சொந்த கிராமத்திற்கு சென்றுவிட்டனர். நாய்க்காக வீட்டை காலி செய்து விட்டனர் .குமாரின் அப்பாவுக்கு நாயும் வேண்டும் மகனும் வேண்டும் போல
கபிலன் ஊர் திருவிழாவிற்கு மாலையில் சென்றிருந்தான். கபிலன் வீட்டிலிருந்து திருவிழா நடக்கும் கோவிலுக்கு ஒரு கிலோ தூரம் இருக்கும். அவன் அங்கே சென்று சாமி கும்பிட்டு விட்டு திருவிழாவைப் சுற்றிப் பார்த்துவிட்டு இருந்தான். இரவு மணி 8 ஆனது வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தான். இன்று இரவு நாடகம் போடுவார்கள் அதையும் சரி பார்த்து விட்டு போகலாம் என்று நினைத்தான். நாடகம் முடியும் மணி 12 ஆனது நான் கோவிலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்.நான் வீட்டுக்கு போக முடியும் இரண்டு வழிகள். முதல் வழி நேராக வீட்டுக்கு செல்வது.இரண்டாம் வழி சுடுகாடு வழி செல்வது. அவன் சுடுகாடு சுற்றி வீடு செல்லலாம் என்று நினைத்தான். அவ்வாறு செல்லும்போது சுடுகாட்டில் ஆ ஊ பயங்கரமான சத்தம் கேட்டது .அங்கு ஏதோ வெள்ளை கலர் ஆவி சுற்றுவதும் பார்த்தான். இரவில் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டான். மறுநாள் காலை முதல் அவன் ஆ ஊ ஊ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.அவனுக்கும் பேய் பிடித்துவிட்டது. கதையின் முடிவு இரவு நேரத்தில் யாரும் சுடுகாட்டுப் பக்கம் செல்லக் கூடாது
கருத்துகள்
கருத்துரையிடுக